×

கொத்துக் கொத்தாய் மடியும் உயிர்கள்… இலங்கையில் அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரவைக்கும் நிஜங்கள்..!

முதலில் குண்டு வெடிப்பு விவகாரத்தை வைத்து முஸ்லீம்களை ஒழிப்பது பின்னர் கிருத்தவர்களை ஒழிப்பது… கடைசியாக இந்து தமிழர்களுடன் மோதி அவர்களை அழிப்பது தான் அவர்களின் மாஸ்டர் ப்ளான். வட இந்தியா குறிப்பாக ஒடிசா பவுத்த இனத்தை சேர்ந்த விஜயன் என்பவர் 700 நபர்களுடன் பாண்டிய நாட்டிற்கு வருகிறார். அவருடன் 700 பேர் வருகின்றனர். மதுரை வரும் அவர்களுக்கு பாண்டிய நாட்டை சேர்ந்த 700 பெண்கள் மணம் முடித்து கொடுக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் கப்பல் மூலம் இலங்கை செல்கின்றனர்.
 

முதலில் குண்டு வெடிப்பு விவகாரத்தை வைத்து முஸ்லீம்களை ஒழிப்பது பின்னர் கிருத்தவர்களை ஒழிப்பது… கடைசியாக இந்து தமிழர்களுடன் மோதி அவர்களை அழிப்பது தான் அவர்களின் மாஸ்டர் ப்ளான்.

வட இந்தியா குறிப்பாக ஒடிசா பவுத்த இனத்தை சேர்ந்த விஜயன் என்பவர் 700 நபர்களுடன் பாண்டிய நாட்டிற்கு வருகிறார். அவருடன் 700 பேர் வருகின்றனர். மதுரை வரும் அவர்களுக்கு பாண்டிய நாட்டை சேர்ந்த 700 பெண்கள் மணம் முடித்து கொடுக்கப்படுகின்றனர்.

பின்னர் அவர்கள் கப்பல் மூலம் இலங்கை செல்கின்றனர். அவர்களால் உருவான சந்ததிகள் தான் சிங்களர்கள். (ஆதாரம் சூல வம்சம் ) அந்த காலகட்டத்திற்கு முன்னரே தமிழர்கள் வடக்கு பகுதியை ஆண்டு வந்தனர். பவுத்தம் பரவ துவங்க சைவ தமிழர்களுக்கும் அவர்களுக்கும் மோதல். பின்னர் பவுத்தர்களுடன் இணக்கம். அடுத்து பாண்டியர் கட்டுப்பாட்டில் பல காலம் இலங்கையின் பல பகுதிகள் இருந்திருக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளில் சிங்களர்கள் பெரும்பாலும் பாண்டியர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளனர்.

பின்னர் சோழர்கள் இலங்கையின் பெரும்பகுதியை ஆட்சி செய்ய மீண்டும் தமிழர்கள் கையில் அந்த நாடு இருந்திருக்கிறது. ( சோழர் வரலாறு) சோழர் வீழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் மன்னன் மகிந்த நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்கிறான். பின்னர் அவன் வீழ்த்ப்பட்டு பாண்டியர் கட்டுபாட்டில் இலங்கை. பின்னர் கிழக்கு கடற்கரையில் இஸ்லாம் பரவுகிறது.

அடுத்து டச்சு மற்றும் பிரித்தானியர்கள் ஆட்சியில் தான் முதன் முறையாக ஒரே குடையின் கீழ் இலங்கை வருகிறது. கிருத்தவம் மெல்ல பரவுகிறது. அங்கு நடைபெற்ற சுதந்திரபோரே மதரீதியிலானது தான். 1800களில் பல சர்ச்சுகள் கொழுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்த காலகட்டத்தில் இந்துக்கள் என அழைக்கப்படும் சைவர்கள் தயவையும் நாடினர் சிங்களர்கள்.

1815களில் நடைபெற்ற கலவரத்தில் ஏராளமான இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் கொல்லப்பட்டனர். இதனால் மதமாற்றத்தை குறைத்துக் கொண்டது பிரிட்டிஸ் அரசு. பின்னர் அந்நாடு சுதந்திரம் அடையும் வரை (யாழ்பாண ) தமிழ் தலைவர்கள் தான் முடிவெடுக்கும் சக்திகளாக இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்னர் பவுத்த இனவாதம் தமிழர்கள் மீது பாய முடிவெடுக்கிறது.

தமிழர்கள் குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் மிகுந்த அறிவாளிகள் இவர்களை விட்டால் நம்மை அடிமையாகவே வைத்துவிடுவார்கள் என சிங்களம் முடிவு செய்கிறது. தமிழர்களை அழித்தொழிக்கும் முயற்சிகள் தொடர தலைவர் பிரபாகரன் இந்து முஸ்லீம் மற்றும் கிருத்தவ தமிழர்களை சாதி மத வேறுபாடுகளின்றி இனைந்து பவுத்த இனவாதிகளுக்கு எதிராக போராட அழைப்பு விடுக்கிறார்.

இதில் கிருத்தவர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியபோதும் இஸ்லாமியர்கள் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தி செல்வந்தர்களாக இருந்ததால் சிங்கள அரசுடன் இனக்கமாக சென்றனர். இதனால், சிங்களம் தமிழ் இஸ்லாமியர்கள் ஒருபுறம் சைவர்கள் கிருத்தவர்கள் ஒருபுறம் என போர் நடைபெற்றது.

அந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் சிங்கள இனவாதிகளை பெரிதும் நம்பினர். ஒருகட்டத்தில் போர் முடிவுக்கு வந்தது. சிங்கள இனவாதிகளின் முக்கிய குறிக்கோளே தமிழர்களை ஒழிப்பது தான். முதலில் வடக்கு தமிழர்கள் பின்னர் கிருத்தவர்கள் கடைசியாக இஸ்லாமியர்கள்.

ஏற்கெனவே தமிழர்களை கொன்று குவித்தாகிவிட்டது. அத்தோடு சேர்ந்த கிருத்தவர்களும் முடிந்து போனார்கள். இப்போது பாக்கி இருப்பது இஸ்லாமியர்கள். 2014 ராஜபக்சே ஆட்சி நிறைவு பெறும் சமயத்தில் துவங்கினார்கள் வேட்டையை… அவர்களின் முதல் திட்டம் பொருளாதார ரீதியில் இஸ்லாமியர்களை அழிப்பது. பின்னர் அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவது. பல இடங்களில் புத்த பிட்சுக்களே கலவரத்தில் நேரடியாக இறங்கினர். கடைகளையும், வீடுகளையும் கொழுத்தினர்.

அப்போது தொடங்கியது பவுத்த – முஸ்லீம் பிரச்சனை. கடந்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் மெல்ல வேலை செய்ய ஆரம்பித்தது. ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு பின்னர் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அல்பாக்தாதி மொசூல் குண்டு வெடிப்பில் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவிக்க சிறிது இடைவேளை.

தற்போது இலங்கை அரசை மிரட்டஇந்தக் கொடூர குண்டு வெடிப்பை நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய அரசியல்வாதிகள் ஈழ பிரச்சனையின் போது மெளனம் சாதித்ததால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சனைகள் வெடித்த போது வடக்கு கிழக்கு இந்து தமிழர்கள் மற்றும் கிருத்தவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.

சிங்களர்களை தாக்கினால் பெரும் பகுதி இஸ்லாமியர்கள் அங்கு வாழவே முடியாது. அதே போல வடக்கு தமிழர்கள் பகுதியில் குண்டுவைத்தால் நம் இனத்திற்கு அதோ கதி தான் என்பதை நன்கு அறிந்த தீவிரவாதிகள் கொழும்பு நகரில் கிருத்தவர்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர்.

மற்றொரு விஷயமும் இதில் இருக்கிறது. கிருத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தான் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதும் ஒரு யுக்தி. சரி இனி என்ன நடக்கும்..? அடுத்த தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். வடக்கு தமிழர்களோடு பவுத்தமும் இந்துவும் கிட்டதட்ட ஒன்று தான் நாம் இருவரும் சண்டையிட்டுக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு தேவையானதை நாங்கள் செய்து தருகிறோம் என்ற திட்டத்துடன் களம் இறங்கி முதலில் குண்டு வெடிப்பு விவகாரத்தை வைத்து முஸ்லீம்களை ஒழிப்பது பின்னர் கிருத்தவர்களை ஒழிப்பது… கடைசியாக இந்து தமிழர்களுடன் மோதி அவர்களை அழிப்பது தான் அவர்களின் மாஸ்டர் ப்ளான்.

இப்படி சிங்கள இனவாதிகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல சதி திட்டங்களை போட்டு தோல்வி அடைந்து தமிழ் மன்னர்களிடம் நாட்டை இழந்தது தான் மிச்சமாகியிருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் வெற்றிபெற்றிருந்தாலும் (எல்லாலனை வீழ்த்தியது கிபி2 சோழர்களை வென்றது கிபி 1075) சிறிது காலத்தில் மீண்டும் பாண்டியர்கள் வசம் நாட்டை இழந்திருக்கிறார்கள்.

அந்த வரலாற்று ஆய்வின் படி சதி திட்டங்களில் கடைசி வெற்றி தமிழனுக்கே இருந்திருக்கிறது. நாம் அந்த காலகட்டம் வரை உயிருடன் இருப்போமோ… இல்லையோ..?  சிங்களர்கள் சதி வென்றதாக சரித்திரமே இல்லை என்ற நிலை வந்தே தீரும்… இது நம்பிக்கை மட்டுமல்ல… வரலாற்று நிஜம்..!!!