கால்கள் கிடைத்த சந்தோஷத்தில் செயற்கை காலுடன் நடனம் ஆடிய சிறுவன்: வைரல் வீடியோ!
செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பிறகு சிறுவன் ஒருவன் சந்தோசத்தில் தன்னை மறந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பிறகு சிறுவன் ஒருவன் சந்தோசத்தில் தன்னை மறந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்கள் இல்லாமல் முடங்கிப்போய் கிடந்த சிறுவன் ஒருவன் தன்னம்பிக்கையுடன் மீண்டும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளான். ஆஃப்கானிஸ்தானை நாட்டை சேர்ந்த அகமது என்ற சிறுவன், அவன் வசித்த பகுதியில் நடந்த சுரங்கம் வெடி விபத்தில் ஒரு காலை இழந்துள்ளார். இதனையடுத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் எலும்பியல் மருத்துவமனையில் அகமத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகச் சிறுவனுக்குச் செயற்கை கால் பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் அகமதிற்கு தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. தனக்கு மீண்டும் கால்கள் கிடைத்த சந்தோசத்தில் சிறுவன் செயற்கை காலுடன் நடனம் ஆடியுள்ளார். இதைக் கண்ட பலரும் அகமத்திற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.