×

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்திய கொடூரம்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!?

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ: கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா சிகாகோ நகரை சேர்ந்தவர் ஒசாவோ லோபஸ். 19 வயதான இவர் கடந்த வருடம் திருமணம் ஆன ஒசாவோ, தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒசாவோவை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து
 

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ: கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சிகாகோ நகரை சேர்ந்தவர்  ஒசாவோ லோபஸ். 19 வயதான இவர் கடந்த வருடம் திருமணம் ஆன ஒசாவோ, தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒசாவோவை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய தேடலில் ஒசாவோ அவரது வீட்டின் அருகிலேயே பிணமாகக் கிடந்துள்ளார். ஆனால்  அவரது வயிற்றில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில் ஒசாவோவின் பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிய சமயத்தில் அவரின் வயிற்றைக் கிழித்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  கர்ப்பிணி பெண்களுக்கு இலவச உடைகள் வழங்குவதாக முகநூலில் வந்த தகவலை அடுத்து ஒசாவோ  அதை வாங்கச் சென்ற சென்றபோது தான் அவர் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.