×

கரடி தூக்கி சென்ற வேட்டைக்காரரின் தற்போதைய நிலை இதுதான்: நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்!

இரைக்காக ஒருவரை கரடி ஒன்று தூக்கி சென்று ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த ஒன்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்கோ: இரைக்காக ஒருவரை கரடி ஒன்று தூக்கி சென்று ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த ஒன்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துவா மலைப்பகுதிக்கு ரஷ்யாவை சேர்ந்த சிலர் வேட்டை நாய்களுடன் வேட்டைக்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குகையை கண்ட நாய்கள் அங்கு பார்த்துக் குறைத்துள்ளது. இதனால் அவர்கள் குகையில் ஏதோ இருக்குமோ என்ற சந்தேகத்தில்
 

 இரைக்காக  ஒருவரை கரடி ஒன்று  தூக்கி சென்று ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த  ஒன்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ:  இரைக்காக  ஒருவரை கரடி ஒன்று  தூக்கி சென்று ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த  ஒன்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துவா மலைப்பகுதிக்கு ரஷ்யாவை சேர்ந்த சிலர் வேட்டை நாய்களுடன் வேட்டைக்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குகையை கண்ட நாய்கள்  அங்கு பார்த்துக் குறைத்துள்ளது. இதனால் அவர்கள் குகையில் ஏதோ இருக்குமோ என்ற சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம்  வெறும் எலும்புடன் உடல் மெலிந்த நிலையில் ஒருவர் உயிருடன்  அங்கு கிடந்துள்ளார். உடனே  அவரை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

தன்னை பற்றி மருத்துவர்களிடம் கூறிய அவர், தன் பெயரை  அலெக்சாண்டர் என்றும் ஒரு மாதமாகத் தான் குகையிலிருந்ததாகவும் கூறியுள்ளார். இரைக்காகக் கரடி ஒன்று அவரை தூக்கி சென்று அவரது முதுகெலும்பை  உடைத்துள்ளது. இதனால் அவர் நடக்கமுடியாமல் இருந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகச் சிறுநீரை  குடித்து உயிர்வாழ்ந்துள்ளார். தேவைப்படும்போது உண்பதற்காகக் கரடி அவரை குகையில் வைத்திருந்துள்ளது.  

இது குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், ‘ இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஒருவர் சிறுநீர் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்துள்ளது அதிசயமாக உள்ளது’ என்று வியந்துள்ளனர்.