×

கணவரின் அன்பு தொல்லை தாங்கல; எனக்கு டைவர்ஸ் வேணும்: இளம்பெண்ணின் வியக்க வைக்கும் காரணம்!

கணவர் என் மீது அதீத காதலோடு இருப்பதால் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் என் மீது அதீத காதலோடு இருப்பதால் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சார்ஜா நீதிமன்றத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்த காரணம் அனைவரையும் திக்குமுக்காடச் செய்துள்ளது. அதில்,
 

கணவர் என் மீது அதீத காதலோடு இருப்பதால் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் என் மீது அதீத காதலோடு இருப்பதால் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் கூறியுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சார்ஜா நீதிமன்றத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்த காரணம்  அனைவரையும் திக்குமுக்காடச் செய்துள்ளது.  

அதில், எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. என் கணவர் என்னை அதிகமாகக் காதலிக்கிறார். மொத்த அன்பையும் என் மீது செலுத்துகிறார். அவர் என்னிடம் ஒருநாள் கூட கோபப்பட்டது இல்லை. வீட்டு  வேலைகளில்  எனக்கு உதவியாக இருக்கிறார். பரிசுகளை வாங்கி வந்து கொட்டுகிறார். இந்த ஒருவருட திருமண வாழ்க்கையில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை.

நான் தவறு செய்தால்  கூட உடனே மன்னித்து விடுகிறார். ஆனால் எனக்கு சண்டை தேவைப்படுகிறது. ஒரு விவாதம் தேவைப்படுகிறது. அது என் கணவரிடமிருந்து கிடைக்காது என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு நரகமாக இருக்கிறது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனால்  அந்த பெண்ணின் கணவரோ, நான் இதுவரை நல்ல கணவனாக வாழ்ந்து வருகிறேன். என்னால் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லை. என் மனைவிக்கு அறிவுரை கூறி வழக்கை வாபஸ் வாங்க வையுங்கள்’ என்று கூறுகிறார். 

கணவன் – மனைவி இருதரப்பு கருத்துக்களையும் விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் கால  அவகாசம் வழங்கியுள்ளது.