×

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எத்தியோப்பியா விமான விபத்து ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த போயிங்-737 ரக விமானம், நேற்று முன்தினம் காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. அந்த
 

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எத்தியோப்பியா விமான விபத்து 

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த போயிங்-737 ரக விமானம், நேற்று முன்தினம் காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே, அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த அனைவரும் பலியானார்கள். மொத்தம் 33 நாடுகளை சேர்ந்த பயணிகள் அதில் பயணித்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 4 பேர் என்று முதலில் நேற்று தகவல் வெளியானது. அவர்களின் பெயர்கள், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா, ஷிகா கார்க் என்று தெரியவந்தது.

பலியான இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வு 

இந்நிலையில், வைத்யா பன்னகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அன்னகேஷ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த பிரேரிட் தீக்‌ஷித், அவருடைய மனைவி கோஷா, மகள்கள் ஆஷ்கா, அனுஷ்கா ஆகியோரும் அதே விமானத்தில் பயணம் செய்து பலியாகி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் குஜராத் மாநிலம் சூரத் நகரை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களுடன், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

பலியானோரில், ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பிலான ஐ.நா. பெண் ஆலோசகராக பணியாற்றி வந்தார். ஐ.நா. தொடர்பான ஒரு கூட்டத்தில் பங்கேற்க கென்யாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பலியானோரின் குடும்பத்தினருக்கு உதவுமாறு கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரல் பதிவு கருவிகளும், டேட்டா பதிவு கருவிகளும் கிடைத்துள்ளன.