×

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல்!

அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட உள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு ஒன்று அறிவிக்கப்பட்டது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக விருது
 

அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட உள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு ஒன்று அறிவிக்கப்பட்டது.

அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக விருது குழுவினர் அறிவித்துள்ளனர்.  அண்டை நாடான எரித்ரியாவுடன் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்துவந்த சிக்கலான எல்லை பிரச்னையை தீர்மானம் மூலம் அகிம்சை வழியில் தீர்த்ததற்காகவும், அமைதியை ஏற்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்புக்காகவும் அபய்க்கு இந்த விருந்து வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எத்தியோப்பியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அபய் பல்வேறு சீர்த்திருந்தங்களை அந்நாட்டில் மேற்கொண்டுவருகிறார்.