×

‘இப்படி ஒரு சூழலில் எங்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை”..தன் குழந்தைகளின் முன்பு திருமணம் செய்து கொண்ட தாய் !

பிரிட்டனில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 12 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். பிரிட்டனில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 12 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இப்போது 7 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவருக்குக் கடந்த ஆண்டு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை அளித்துள்ளனர், ஆனால் எந்த சிகிச்சையின் மூலமாகவும் அவர் புற்றுநோயில் இருந்து
 

பிரிட்டனில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 12 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர்.

பிரிட்டனில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 12 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இப்போது 7 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவருக்குக் கடந்த ஆண்டு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை அளித்துள்ளனர், ஆனால் எந்த சிகிச்சையின் மூலமாகவும் அவர் புற்றுநோயில் இருந்து மீண்டு வரவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அவரது நாக்கு பாதிக்கு மேலாக அகற்றப்பட்டு, அவரது காலில் உள்ள தோலைக் கொண்டு செயற்கை நாக்கு பொருத்தப்பட்டுள்ளது. 

 

இருப்பினும் அவரை குணப்படுத்த முடியாது என்றும் அவர் இன்னும் சில மாதங்களில் உயிரிழந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அந்த தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன் படி, தன் 7 குழந்தைகள் முன்னிலையில் அந்த தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்துப் பேசிய அந்த தாய், தன் குழந்தைகள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். ஆனால், இப்படி ஒரு சூழலில் எங்களின் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் கணவருக்கு மது, புகைபிடித்தல் என்ற எந்த பழக்கமும் இல்லை.” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.