×

இந்தியாவை இந்து நாடாக மாற்றுகிறார் மோடி! – உலக கோடீஸ்வரர் பேச்சால் சர்ச்சை

ஜனநாயகப்படி தேந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி வருகிறார் என்று உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சொரெஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகப்படி தேந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி வருகிறார் என்று உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சொரெஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவிலான அரசியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் உரையாற்ற உலகின் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள்
 

ஜனநாயகப்படி தேந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி வருகிறார் என்று உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சொரெஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகப்படி தேந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியாவை இந்து நாடாக மாற்றி வருகிறார் என்று உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சொரெஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவிலான அரசியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் உரையாற்ற உலகின் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 

உலக கோடீஸ்வரர்கள் ஒருவரான ஜார்ஜ் சொரெஸ் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்கா – சீனா உறவு பற்றி பேசினார். அவருடைய பேச்சு தேசியவாதம் என்ற தலைப்பின் கீழ்வந்தபோது, இந்தியாவின் பிரதமர் பற்றி அவர் பேசினார்.

அப்போது அவர், “தேசியவாதம் என்ற சிந்தனையில் முன்னேற்றம் ஏற்படாமல், அது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே செல்கிறது. இதில் மிகப்பெரிய மற்றும் மிக அச்சுறுத்தும் பின்னடைவு இந்தியாவில் நடந்துவருகிறது. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட மோடி அங்கு இந்து தேசியவாதத்தை உருவாக்கி வருகிறார். அரை தன்னாட்சி பிராந்தியமாக இருந்த காஷ்மீரில் அடக்குமுறைகளை அமல்படுத்துகிறார். குடியுரிமை என்ற பெயரில் லட்சக் கணக்கான இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வருகிறார்” என்றார்.
ஜார்ஜ் சொரெஸ் பேச்சு இந்தியாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்குள் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.