×

இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஆஸ்திரேலியாவில் கொலை; திடுக்கிடும் தகவல்கள்!

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி பெண்ணான பிரீத்தி ரெட்டி ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரீத்தி ரெட்டியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்
 

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பெண்ணான பிரீத்தி ரெட்டி ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரீத்தி ரெட்டியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரீத்தியின் கார் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காரின் டிக்கியை திறந்து பார்த்தனர். அதில் இருந்த சூட்கேசில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிரீத்தி ரெட்டி சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை மீட்டா போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, பிரீத்தி ரெட்டியின் முன்னாள் காதலரும் சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு வந்துள்ளதாகவும், அவருடன் பிரீத்தி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்துள்ளது.

அதேபோல், பிரீத்தி ரெட்டி ஞாயிற்றுக்கிழமை காலை உணவை முடித்துவிட்டு பில் கட்டும் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்த சில மணி நேரங்களிலேயே, சிட்னி சாலை விபத்தில் பிரீத்தியின் முன்னாள் காதலர் உயிரிழந்தார்.

எனவே இதற்கும், பிரீத்தியின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.