×

ஆயுர்வேதம் மூலம் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று குணமாகவில்லை

ஆயுர்வேதம் மூலம் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று குணமாகவில்லை என தெரியவந்துள்ளது. லண்டன்: ஆயுர்வேதம் மூலம் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று குணமாகவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. அவர் உடல்நலத்தோடு இருப்பதாக அரச குடும்பம் தெரிவித்திருந்தது. அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் தென்படவில்லை. இளவரசர்
 

ஆயுர்வேதம் மூலம் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று குணமாகவில்லை என தெரியவந்துள்ளது.

லண்டன்: ஆயுர்வேதம் மூலம் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று குணமாகவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 25-ஆம் தேதி இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. அவர் உடல்நலத்தோடு இருப்பதாக அரச குடும்பம் தெரிவித்திருந்தது. அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் தென்படவில்லை. இளவரசர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 30-ஆம் தேதி குணமடைந்தார்.

இதையடுத்து ஆயுர்வேத மருத்துவம் தான் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸைக் குணப்படுத்த உதவியது என்று மத்திய ஆயுஷ் மாநில அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். இந்நிலையில், ஆயுர்வேதம் மூலம் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகவில்லை” என ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக்கின் கூற்றுக்களை இளவரசர் சார்லஸ் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.