×

ஆசையாக வளர்த்த பறவையே உயிரை பறித்த கோரம்!

ஆசையாக வளர்த்த பறவையே அதன் உரிமையாளரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா: ஆசையாக வளர்த்த பறவையே அதன் உரிமையாளரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 75 வயதான மார்வின் ஹாஜொஸ் வித்தியாசமான உயிரினங்களைச் செல்ல பிராணியாக வளர்ப்பதில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். இவர் உலகிலேயே ஆபத்தான ஈமு இனத்தைச் சேர்ந்த பறவையான கசோவாரி பறவையை வளர்த்து வந்துள்ளார். இதற்கு உணவு கொடுப்பதற்காகக் கடந்த 12 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல்
 

ஆசையாக வளர்த்த பறவையே அதன் உரிமையாளரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா:  ஆசையாக வளர்த்த பறவையே அதன் உரிமையாளரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 75 வயதான மார்வின் ஹாஜொஸ் வித்தியாசமான உயிரினங்களைச் செல்ல பிராணியாக வளர்ப்பதில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். இவர் உலகிலேயே ஆபத்தான ஈமு இனத்தைச் சேர்ந்த பறவையான கசோவாரி பறவையை வளர்த்து வந்துள்ளார். இதற்கு உணவு கொடுப்பதற்காகக் கடந்த 12 ஆம் தேதி சென்றுள்ளார். 

அப்போது எதிர்பாராமல் அவர் கால் இடறி கீழே விழ இதைக் கண்ட   கசோவாரி  தனது அலகால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளது, இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள,  அமெரிக்க சரணாலய அதிகாரிகள், ஆபத்தான பறவையான கசோவாரியை செல்லப் பிராணியாக வளர்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். 

உலகின் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் கசோவாரி பறவைகள் ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. சுமார் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை  இந்த பறவை வளரக்கூடும். ஆசையாக வளர்த்த பறவையே முதியவரின் உயிரைப் பறித்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: தோனி தலயா? அப்போ அஜித் யாருய்யா? கார்த்திக் சுப்புராஜை வச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்!