×

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரூ. 14 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்…!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறக்கட்டளையின் நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கில், சுமார் 14 கோடி ரூபாய் அபராதம் செலுத்த நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப், ‘டொனால்ட் ஜே ட்ரம்ப் பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்த தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்த நிலையில்,
 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறக்கட்டளையின் நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கில்,  சுமார் 14 கோடி ரூபாய் அபராதம் செலுத்த நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப், ‘டொனால்ட் ஜே ட்ரம்ப் பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்த தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்த நிலையில், ட்ரம்ப் மீதான மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ. 14 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

மற்றவர்களிடம் பணம் பெற்று நடத்தப்படும் அறக்கட்டளைகள், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் ட்ரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.