×

பிரவச வலியில் துடித்த மகள்… அதிர்ச்சியில் இறந்த தாய்? – மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம்!

இறந்த பின் மீண்டும் உயிர்த்தெழுதல் என்று கேட்டவுடன் நமக்கு கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு தான் நியாபகத்திற்கு வருவார். அதை யாரும் நேரில் கண்டார்களா என்பது தெரியாது. ஆனால் அந்தக் கதை பல ஆண்டு காலமாக மக்களிடையே கடத்தப்பட்டு இயேசு பிறந்ததற்குப் பின் 2021 ஆண்டுகள் வரை நம்பப்படுகிறது. அது அவர்களின் நம்பிக்கை நாம் அதில் தலையிட வேண்டியதில்லை. இதனை நம்பி அண்மையில் ஒரு பாதிரியார் உயிருடன் குழிக்குள் தாமாகவே புதைந்துகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தற்போது உண்மையாகவே
 

இறந்த பின் மீண்டும் உயிர்த்தெழுதல் என்று கேட்டவுடன் நமக்கு கிறிஸ்தவர்களின் கடவுள் இயேசு தான் நியாபகத்திற்கு வருவார். அதை யாரும் நேரில் கண்டார்களா என்பது தெரியாது. ஆனால் அந்தக் கதை பல ஆண்டு காலமாக மக்களிடையே கடத்தப்பட்டு இயேசு பிறந்ததற்குப் பின் 2021 ஆண்டுகள் வரை நம்பப்படுகிறது. அது அவர்களின் நம்பிக்கை நாம் அதில் தலையிட வேண்டியதில்லை. இதனை நம்பி அண்மையில் ஒரு பாதிரியார் உயிருடன் குழிக்குள் தாமாகவே புதைந்துகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் தற்போது உண்மையாகவே இதுபோன்ற மருத்துவ அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆம் தமிழ்ப் படங்களில் கூறுவது போல இட்ஸ் மெடிக்கல் மிராக்கள் தான். அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேத்தி பேடன். இவர் கோல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அவ்வாறு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர்கள் மகள் பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பதறியடித்துக் கொண்டு கேத்தி ஓடியிருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட பயத்தின் விளைவாக அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அட்மிட்டான மகளைப் பார்க்க சென்ற வாழ்க்கை அவரையே அட்மிட் ஆக வைத்துவிட்டது. அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவரின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க முடியவில்லை. மேலும் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனும் நிற்கவே, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கையை விரித்தனர். மகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தான் அந்த மெடிக்கல் மிராக்கள் நிகழ்ந்தது. இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட கேத்தியின் ஆக்சிஜன் லெவல் திடீரென அதிகரித்து மீண்டும் கண் விழித்தார்.

இதனை மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை. தாங்கள் நிஜத்தில் தான் இருக்கிறோமா என தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்களாம். இதுதொடர்பாக கேத்தி கூறுகையில், “இது வாழ்க்கை எனக்கு அளித்த இரண்டாவது வாய்ப்பு. எல்லா வகையிலுமே நான் ஸ்பெஷலான பெண். இதிலும் எனக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது. இனி வரும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வாழ்வேன். இது என் புது வாழ்வு” என்று கூறியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அனைவரும் கேத்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இட்ஸ் மெடிக்கல் மிராக்கள்.