செங்டூவில் உள்ள தூதரகத்தை மூட அமெரிக்காவுக்கு உத்தரவு! – சீனா பதிலடி
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சீனாவின் செங்டூவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தில் சீன அதிகாரிகள் ஆவணங்களை எரித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அந்த துணை தூதரக அலுவலகத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு சீனா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வூஹானில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மூட உத்தரவிடுவது தொடர்பாக
Jul 24, 2020, 13:16 IST
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சீனாவின் செங்டூவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தில் சீன அதிகாரிகள் ஆவணங்களை எரித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அந்த துணை தூதரக அலுவலகத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு சீனா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வூஹானில் உள்ள அமெரிக்க துணை
தூதரகத்தை மூட உத்தரவிடுவது தொடர்பாக சீனா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மூடும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.