ஒரே நாளில் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சியளிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு மற்றும் பொது மக்கள் கொரோனா விழிப்புணர்வோடு செயல்படாவிட்டால் விரைவில் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.