அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!
வட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சிறிய அளவில் சுனாமி அலைகள் எழுந்ததால் கடற்கரை பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். சாண்ட் பாயிண்ட், சிக்னிக், உனாலஸ்கா மற்றும் கெனாய் உள்ளிட்ட தெற்கு கடற்கரையிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று
Oct 20, 2020, 08:36 IST
வட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சிறிய அளவில் சுனாமி அலைகள் எழுந்ததால் கடற்கரை பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சாண்ட் பாயிண்ட், சிக்னிக், உனாலஸ்கா மற்றும் கெனாய் உள்ளிட்ட தெற்கு கடற்கரையிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று அலஸ்கா. இங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.