“காக்கைக்கு வெட்டி போட்டுடுவாங்களாம் “-இனி ‘இது’ பண்ணால் “அது” போய்டுமாம்..
கற்பழிப்பு குற்றங்களை குறைக்க ,பலாத்கார குற்றங்களுக்கு இனி குற்றவாளியின் ஆண்குறி வெட்டி அகற்றப்படுமென்று கடுமையான சட்டம் ஆப்பிரிக்காவின் நைஜிரியாவில் இயற்றப்பட்டுள்ளது
ஆப்பிரிக்காவின் நைஜீரிய நாட்டில் இந்த கொரானா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் கற்பழிப்பு குற்றங்கள் அதிக அளவில் பெருகிவிட்டதாம் .இதனால் அந்த நாட்டு கடுலா மாநில அரசாங்கம் அவசரமாக கூடி கற்ப்பழிப்பு குற்றங்களை குறைக்க சில கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது .
அதன் படி நைஜிரியாவில் இனி 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் அவரின் ஆண்மையை அகற்றி ,ஆண்குறியும் வெட்டப்படுமென்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது .மேலும் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது .இந்த சட்டம் பற்றி கூறிய நைஜீரிய கவர்னர் நாட்டில் பலாத்கார குற்றங்கள் இந்த பொது ஊரடங்கு காலத்தில் பல மடங்கு உயர்ந்து விட்டதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் நிலவுவதால் குற்றங்களை குறைக்க இப்போது இந்த மாதிரி கடுமையான சட்டம் தேவைப்படுகிறதென்று கூறினார் .மேலும் இதற்கு பிறகாவது பாலியல் குற்றவாளிகள் இது போல் குற்றங்களை செய்வதற்கு அஞ்சுவார்களென்றும் ,இதனால் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான நாடாக நைஜீரியா உருவாகுமென்றும் அவர் கூறினார் .இதற்கு முன்பு பாலியல் குற்றங்களுக்கு 21 ஆண்டுகால சிறை தண்டனையும் ,குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் அமலில் இருந்தது .