×

‘கழிப்பறையில் குழந்தை’ பயணிகளை நிர்வாணமாக்கி சோதித்த அதிகாரிகள்; அதிர்ச்சி சம்பவம்!

கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் இருக்கும் கழிப்பறையை, வழக்கம் போல பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது கழிப்பறையில், உயிருடன் பச்சிளங்குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் , உடனே அந்த இடத்துக்கு வந்து குழந்தையை கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த நபர்களிடம் விசாரணை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால்
 

கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் இருக்கும் கழிப்பறையை, வழக்கம் போல பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது கழிப்பறையில், உயிருடன் பச்சிளங்குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் , உடனே அந்த இடத்துக்கு வந்து குழந்தையை கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த நபர்களிடம் விசாரணை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் குழந்தை யாருடையது என்பது தெரியவராததால், விமானத்தில் பயணிக்கவிருந்த 13 ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்ட பெண் பயணிகளை நிர்வாணமாக்கி மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். குறிப்பாக, எதற்காக பரிசோதனை நடக்கிறது என்பதை பயணிகளிடம் தெரிவிக்காமலேயே நிர்வாணமாக பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணமாக பெண்களை பரிசோதித்தற்கு ஆஸ்திரேலிய அரசு கத்தார் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கத்தார் விமான சேவை இது தொடர்பான எந்த விளக்கமும் அளிக்கவில்லையாம். மேலும், கழிப்பறையில் மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு சிறப்பான கவனிப்பு அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.