கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் வகையில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் பற்றி கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வட கொரியா தொடர்ந்து தன்னுடைய அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அணு ஆயுதங்களை தயாரித்தும் வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த வசதியா விதவிதமான அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.