×

ஜும் வீடியோ காலில் 20 பேர் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

ஜும் வீடியோ கால் ஆப்பில் சுமார் 20 பேர் முன்னிலையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில் வசிப்பவர் 72 வயதான டுவைட் பவர்ஸ். இவர் ஜும் வீடியோ கால் ஆப்பில் 20 நபர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் பேசி கொண்டிருக்கும் போது அங்கு வந்த அவரின் மகன் தாமஸ் ஸ்கல்லி பவர்ஸ், அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதை வீடியோ காலில் இருந்த அனைவரும் பார்த்து
 

ஜும் வீடியோ கால் ஆப்பில் சுமார் 20 பேர் முன்னிலையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில் வசிப்பவர் 72 வயதான டுவைட் பவர்ஸ். இவர் ஜும் வீடியோ கால் ஆப்பில் 20 நபர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் பேசி கொண்டிருக்கும் போது அங்கு வந்த அவரின் மகன் தாமஸ் ஸ்கல்லி பவர்ஸ், அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதை வீடியோ காலில் இருந்த அனைவரும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் அழைப்பிலிருந்த சிலர் உடனடியாக 911 அவசர உதவிக்கும் அழைத்து தகவலைத் தெரிவித்துள்ளனர். போலீசாரின் வருகையை கண்டு தப்பியோட நினைத்த தாமஸை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

டுவைட் பவர்ஸை அவரின் மகன் கொலை செய்த போது, அவருடன் வேறு ஒரு நபரும் நிர்வாணமாக அருகிலிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமஸிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.