×

இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் - இந்திய தூதரகம் பதிலடி 

 

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியையும் அவமதித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் மிகப்பெரிய அளவிலான தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. 

இங்கிலாந்தில்ல் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் திடீரென கையில் காலிஸ்தான் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இந்திய தூதரகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய தூதரகத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தன்னர்.