×

இந்திய வீரர்கள் தங்கிய ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு - நடந்தது என்ன?

 

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல் என பல உயிர்களைக் காவு வாங்குகின்றனர். தற்போது உகாண்டா நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். குறிப்பாக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்பவம் நடந்திருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் நாட்டின் தலைநகர் கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்துகொள்ள சென்ற இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கம்பாலாவில்தான் தங்கியுள்ளனர். இவர்களில் 9 பேர் தமிழ்நாட்டு வீரர்கள். இவர்கள் அனைவரும் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் அடுத்தடுத்து மூன்று தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இருப்பினும் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.