×

இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு சிறை – சாட்டையை சுழட்டிய முக்கிய நாடு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாகப் பரவுகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய
 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாகப் பரவுகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய வைரஸ் பயங்கர வீரியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் இந்தியாவிலிருந்து வருபவர்களால் இந்தப் புதிய வகை வைரஸ் தங்கள் நாடுகளுக்கும் பரவலாம் என்பதால் பல்வேறு நாடுகள் போக்குவரத்து தடையை அறிவித்துள்ளன. ஆஸ்திரேலிய நாடு இந்தியாவிலிருந்து விமானங்கள் வர மே 15ஆம் தேதி வரை தடை போட்டுள்ளது. ஆனால் சிலர் இந்தியாவிலிருந்து நேரடியாகச் செல்லாமல் வேறு நாடுகளின் வழியே ஆஸ்திரேலியா செல்வதாகக் கூறப்படுகிறது.

இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவிலிருந்து வந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 3ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.