×

திட்டமிட்டபடி இலங்கை அதிபர் ராஜினாமா - பிரதமர் அலுவலகம் தகவல்

 

இலங்கை அதிபர் கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை..   மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.  அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு வீரர்களை மீறி அதிபர் மாளிகைக்குளும்  நுழைந்தனர்.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார்.  உயிருக்கு பயந்து தலைமறைவாகியிருக்கும்  கோத்தபய எங்கிருக்கிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை..அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்பே அறிவித்தது போன்று அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் தெரிவித்து உள்ளார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது. அதன்படி முன்னர் கூறியபடி ஜூலை 13ம் தேதி அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது