ஜி-20 மாநாட்டில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிபர் ஜோ பைடன்..
இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ ஜின்பிங் இருவரும் பேசுவர்த்தை நடத்த உள்ளனர்.
இந்தோனேஷியாவின் பாலி நகரத்தில் வரும் 14ம் தேதி ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் சீ ஜின்பிங் உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறர்கள். இந்த மாநாட்டிற்கிடையே ஜோ பைடன் சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன் தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14ம் தேதி சீன அதிபர் சீ ஜின்பீங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்துள்ளார். தைவானுடன் அமெரிக்கா நட்பு கொண்டிருப்பது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தைவான் மீது சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது தொடர்கதையாகி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது..
இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது... இதுமட்டுமின்றி வர்த்தக தொடர்பு , சவாலான நேரங்களில் இணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.