×

9 லட்சத்தை தொடும் இறந்தவர்களின் எண்ணிக்கை – உலகளவில் கொரோனா நிலவரம்

உலகளவில் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட விருக்கிறது, இது பெரும் ஆபத்தான சூழல். செப்டம்பர் 8-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்து 116 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 95 லட்சத்து 90 ஆயிரத்து
 

உலகளவில்  கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட விருக்கிறது, இது பெரும் ஆபத்தான சூழல்.

செப்டம்பர் 8-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 74 லட்சத்து  89 ஆயிரத்து 116 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 95 லட்சத்து 90 ஆயிரத்து 209 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 865 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். இன்னும் 3000 + பேர் சேர்ந்தால் 9 லட்சத்தைத் தொட்டுவிடும். இது பெரும் எண்ணிக்கை.

72,000 பேருக்கு அதிகமாக இந்தியாவில் மட்டுமே இறந்திருக்கிறார். அதிகப் பேர் இறந்தது அமெரிக்காவில்தான் 1 லட்சத்து 93 ஆயிரத்து 543 பேர். அதற்கு அடுத்த பாதிப்பு பிரேசிலுக்கு. அங்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 1 பேர் இறந்திருக்கிறார்கள்

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 70,02,042 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 64,85,575 பேரும், இந்தியாவில் 42,80,422            பேரும், பிரேசில் நாட்டில்  41,47,794 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 25,325 பேரும், பிரேசிலில் 10,188 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 75,022 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.