×

‘வடசென்னை’ பாணியில் சிறைக்குள் ‘கேங் வார்’ – 79 கைதிகள் பலி!

தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் சிறைக்குள்ளேயே இரு கும்பல்களுக்கிடையே அதிகாரப் போட்டி இருக்கும். நீ பெருசா, நான் பெருசா என்ற தலைமைத்துவ சண்டை நடக்கும். தற்போது இதே பாணியில் அதிகாரப் போட்டியில் ஈகுவோடர் நாட்டில் மிகப்பெரிய கலவரமே வெடித்துள்ளது. இதனால் 79 உயிர்களும் பலியாகியிருக்கின்றன. குறிப்பாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் மூன்று சிறைகளில் இக்கலவரம் அரங்கேறியிருக்கிறது. இதன்மூலம் மூன்று சிறைகளின் கைதிகளுக்கும் தொலைத் தொடர்பு சேவை இருந்ததை அறியமுடிகிறது. அதேபோல அவர்கள் பயங்கரமான ஆயுதங்களைத் தாக்குவதற்குப்
 

தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் சிறைக்குள்ளேயே இரு கும்பல்களுக்கிடையே அதிகாரப் போட்டி இருக்கும். நீ பெருசா, நான் பெருசா என்ற தலைமைத்துவ சண்டை நடக்கும். தற்போது இதே பாணியில் அதிகாரப் போட்டியில் ஈகுவோடர் நாட்டில் மிகப்பெரிய கலவரமே வெடித்துள்ளது. இதனால் 79 உயிர்களும் பலியாகியிருக்கின்றன.

குறிப்பாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் மூன்று சிறைகளில் இக்கலவரம் அரங்கேறியிருக்கிறது. இதன்மூலம் மூன்று சிறைகளின் கைதிகளுக்கும் தொலைத் தொடர்பு சேவை இருந்ததை அறியமுடிகிறது. அதேபோல அவர்கள் பயங்கரமான ஆயுதங்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். தற்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றும் வேலையில் சிறைத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈக்வோடாரில் இதேபோல கலவரம் நடப்பது முதல் முறையல்ல. சமீபத்தில் மட்டுமே பல முறை கைதிகளுக்குள் மோதல் வெடித்துள்ளது. 27 ஆயிரம் கைதிகள் மட்டுமே அடைக்கப்படும் சிறையில் 38 ஆயிரம் பேர் அடைக்கப்படுவதே கலவரத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.