×

பிரபாகரனை ஒரு படத்தில் கூட மதுக்குவளையுடன் பார்க்க முடியவில்லை…கமால் குணரத்ன

இலங்கை ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கமால் குணரத்ன, தற்போது இலங்கையில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கிறார். இவர் எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ புத்தகத்தினை இலங்கை பிரதமர் ராஜபக்சே அண்மையில் வெளியிட்டிருந்தார். நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பல்வேறு தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் ஒரு வித்தியாசமான தலைவர். அவரிடம் பலரும் கற்க வேண்டிய நல்ல பண்புகள் பல இருந்தன. தனக்கு உள்ளேயும் தன்னை சுற்றியும் ஒழுக்கத்தினை பேணியவர் பிரபாகரன். பிரபாகரன் ஒரு
 

இலங்கை ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கமால் குணரத்ன, தற்போது இலங்கையில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கிறார். இவர் எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ புத்தகத்தினை இலங்கை பிரதமர் ராஜபக்சே அண்மையில் வெளியிட்டிருந்தார்.

நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பல்வேறு தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

பிரபாகரன் ஒரு வித்தியாசமான தலைவர். அவரிடம் பலரும் கற்க வேண்டிய நல்ல பண்புகள் பல இருந்தன. தனக்கு உள்ளேயும் தன்னை சுற்றியும் ஒழுக்கத்தினை பேணியவர் பிரபாகரன். பிரபாகரன் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். அவர் பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தியமைக்கு எந்தவொரு சான்றும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு திருட்டு நடந்தால் ஷரியத் சட்டத்தில் திருடியவர் தன் கைகளைத்தான் இழப்பார். ஆனால், பிரபாகரன் சட்டத்தில் வாழ்க்கையை இழக்க நேரிடும். அந்த அளவுக்கு அவர் ஷரியத் சட்டத்தினை விடவும் மேலான சட்டத்தினை கடைப்பிடிப்பவராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் கமால் குணரத்ன.

விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான போட்டோக்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அந்த போட்டோக்களில் ஒரு படத்தில் கூட மதுக்குவளையுடன் பிரபாகரனை பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமான தலைவராகவே இருந்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.