×

இலங்கை: தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்ற 225 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச்செல்லப்பட்ட 225 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அந்நாட்டு கடற்படை, இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இலங்கை யாழ் மாவட்டம் ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை சுற்றிவளைத்த, அந்நாட்டு கடற்படையினர், படகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து சுமார் 225 கிலோ கஞ்சாவை படகில் கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த படகை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர், கஞ்சாவைவும்,
 

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திச்செல்லப்பட்ட 225 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அந்நாட்டு கடற்படை, இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கை யாழ் மாவட்டம் ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை சுற்றிவளைத்த, அந்நாட்டு கடற்படையினர், படகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து சுமார் 225 கிலோ கஞ்சாவை படகில் கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த படகை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர், கஞ்சாவைவும், படகையும் பறிமுதல் செய்ததுடன், படகில் இருந்த இருவரை பளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.