×

கடல் வழியாக கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சா இலங்கையில் பறிமுதல்!

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட கஞ்சா பண்டல்களை இலங்கை தலைமன்னார் போலீசார் பறிமுதல் செய்தனர். இலங்கை தலைமன்னார் மாவட்டத்தில் இருக்கும் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதிக்கு இன்று கஞ்சா பண்டல்கள் கடல் வழியாக வந்திருக்கிறது. இது குறித்து இலங்கை கடற்படையினர் அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி, கஞ்சா பதுக்கப்பட்டு இருந்த இடத்துக்கு விரைந்த போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மன்னார் போலீசார் இன்று அதிகால காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது
 

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட கஞ்சா பண்டல்களை இலங்கை தலைமன்னார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைமன்னார் மாவட்டத்தில் இருக்கும் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதிக்கு இன்று கஞ்சா பண்டல்கள் கடல் வழியாக வந்திருக்கிறது. இது குறித்து இலங்கை கடற்படையினர் அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதன் படி, கஞ்சா பதுக்கப்பட்டு இருந்த இடத்துக்கு விரைந்த போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மன்னார் போலீசார் இன்று அதிகால காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மண்ணுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 94 கஞ்சா பண்டல்களில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கஞ்சா மொத்தமாக கேரளாவில் விளைவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவை தமிழகத்தில் இருந்து கடல் வழியாக அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டது? கேரள கஞ்சா எப்படி கிடைத்தது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.