அப்பளம் போல் நொறுங்கிய பள்ளி வேன் - 19 சிறுவர்கள் பலி
பள்ளி வேன் - லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவமும்.
தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் குவாசுலு நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் இயங்கி வருகிறது தனியார் தொடக்கப்பள்ளி. நேற்று முன் தினம் மதியம் இப் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு இருக்கிறது பள்ளிகள் வேன்.
அந்த பள்ளி வேனில் ஐந்து முதல் 12 வயதிற்கு உட்பட்ட 19 சிறுவர்கள் இருந்துள்ளனர். டிரைவர் மற்றும் உதவியாளர் என்று மொத்தம் 21 பேர் இருந்துள்ளார்கள்.
பொங்கோலா நகர் நெடுஞ்சாலையில் பள்ளி வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்திருக்கிறது சரக்கு லாரி. பள்ளி வேனும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கி இருக்கிறது. இந்த விபத்தில் வேனில் இருந்த 19 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். டிரைவர் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.
19 சிறுவர்களும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குவாசுலு நடால் மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.