×

”விஜய்சேதுபதி படத்தை திரைக்கு வர விடமாட்டோம்” -எச்சரிக்கும் பெ.தி.க.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில், முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று உலகமெங்கிலும் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அவர், ‘’ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் அதிபராக விளங்கிய ராஜபக்சேவுக்கு, ஆதரவாக செயல்பட்டவர் முத்தையா முரளிதரன். தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டு
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில், முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று உலகமெங்கிலும் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

அவர், ‘’ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் அதிபராக விளங்கிய ராஜபக்சேவுக்கு, ஆதரவாக செயல்பட்டவர் முத்தையா முரளிதரன். தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்லிக்கொண்டு சிங்களத்தில் உரையாடக்கூடிய முத்தையா முரளிதரன், சிங்கள மக்களுக்கு ஆதரவாக நின்றாரே தவிர, தமிழர்களுக்காக ஈழத்தமிழர்களுக்காக நின்றதில்லை. அப்படிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை கதையில் முத்தையா முரளிதரனாக விஜய்சேதிபதி நடிக்கக்கூடாது என்று நாங்கள் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.


ஈழத்தமிழர்கள் அனைவரும் சிங்கள பேரினவாதத்தால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முரளிதரன் வேடத்தில் நடிப்பதால், கடந்த காலங்களில் நடந்த கொடூரங்கள் மக்கள் மனதில் இருந்து நீர்த்துப்போக வைப்பதற்கு அந்த திரைப்பம் உதவும்.

நல்ல நடிகர், தந்தை பெரியாரின் மீறு பற்று கொண்டிருக்க கூடியவர். மனிதநேயமிக்க மக்கள் சிந்தனையாளர் விஜய்சேதிபதி. அப்படிப்பட்டவர் இந்த படத்தில் நடித்து நல்ல பெயரை கெடுத்துக்கொள்ளகூடாது. அப்படியும் அவர் நடித்தால், அத்திரைப்படம் திரைக்கு வர விடமாட்டோம்’’என்று எச்சரித்திருக்கிறார்.