×

மீண்டும் முழுமுடக்கம் என்பது வதந்தியே- ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. நான்காம் கட்ட ஊரடங்கு என்பது பெயரளவில் இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஊரடங்கை அறிவிக்க திட்டமிட்டுவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய
 

கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. நான்காம் கட்ட ஊரடங்கு என்பது பெயரளவில் இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஊரடங்கை அறிவிக்க திட்டமிட்டுவருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.