×

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ₹36 லட்சம் அபராதம்

 

விதிகளை மீறிய வாகனங்களுக்கு ₹36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவ.1ஆம் தேதி 12 மண்டலங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விதிகளை மீறி அதிக சத்தத்தை ஏற்படுத்தும் ஏர் ஹாரன், முகப்பு விளக்குகள், வண்ண விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் 3667 வாகனங்களை சோதனை செய்ததில் 639 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி இருப்பது தெரியவந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களிடம் 736 லட்சம் அபராதம் சூலிக்கப்பட்டுள்ளது; மேலும் 1059 வாகனங்களில் ஏர் ஹாரன் மற்றும் 180 வாகனங்களில் வண்ண விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன.