×

‘பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை’ : மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம் !

சௌமியா நள்ளிரவு 1 மணிக்குப் பிரசவத்திற்காக ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் அருகே உள்ள ராஜகீழ்பாக்கத்தில் ஸ்ரீராம்- சௌமியா லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சௌமியா நள்ளிரவு 1 மணிக்குப் பிரசவத்திற்காக ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவத்தின் போது அவரின் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் மருத்துவமனையின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை நன்றாக இருந்தும் எப்படி பிரசவத்தில் உயிரிழந்தது என்றும் மருத்துவமனையில்
 

சௌமியா நள்ளிரவு 1 மணிக்குப் பிரசவத்திற்காக ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள ராஜகீழ்பாக்கத்தில் ஸ்ரீராம்- சௌமியா லோகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சௌமியா நள்ளிரவு 1 மணிக்குப் பிரசவத்திற்காக ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவத்தின் போது அவரின் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ளாத உறவினர்கள் மருத்துவமனையின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குழந்தை நன்றாக இருந்தும் எப்படி பிரசவத்தில் உயிரிழந்தது என்றும் மருத்துவமனையில் ஒழுங்காக முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் சௌமியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் அதனைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், சௌமியாவின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால் தான் குழந்தை இறந்துள்ளது  என்றும் முறையான சிகிச்சை தான் அளிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.