×

‘கொரோனாவை மாற்று மருந்தால் குணப்படுத்த முடியும்’..தவறான செய்தியைப் பரப்பியதற்காக ஹீலர் பாஸ்கர் கைது!

யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இதே போல மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹீலர் பாஸ்கர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
 

யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இதே போல மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹீலர் பாஸ்கர். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைப் பற்றிய வதந்திகளும் பரவி வருகின்றன. அந்த வகையில் ஹீலர் பாஸ்கரும், கொரோனா வைரஸை மாற்றுச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். கொரோனா பற்றி வதந்திகள் பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர் பொய்யான தகவல்களைக் கூறியதால் அவர் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன் படி, கொரோனா பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியதற்காக பொதுச் சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை ஆகிய சட்டத்தின் கீழ்  ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.