×

‘கவர்ன்மண்ட் வேலை வாங்கி தரேன்’.. பக்தர்களின் தலையில் ஏறிக் குறி சொல்லும் கார்மேகச் சித்தர் !

கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்து, அருள் வாக்கு சொல்லும் மையம் ஒன்று தொடங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வசித்து வருபவர் பிரபு. இவர் டிராக்டர் மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்து, அருள் வாக்கு சொல்லும் மையம் ஒன்று தொடங்கியுள்ளார். ஆரம்பக் காலத்தில் பக்தர்கள் அவ்வளவாக இல்லை என்றாலும் போகப் போக நன்றாகக் கல்லா கட்டியுள்ளது. அங்குக் குறி கேட்க வருபவர்கள் தலையின்
 

கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்து, அருள் வாக்கு சொல்லும் மையம் ஒன்று தொடங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வசித்து வருபவர் பிரபு. இவர் டிராக்டர் மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்து, அருள் வாக்கு சொல்லும் மையம் ஒன்று தொடங்கியுள்ளார். ஆரம்பக் காலத்தில் பக்தர்கள் அவ்வளவாக இல்லை என்றாலும் போகப் போக நன்றாகக் கல்லா கட்டியுள்ளது. அங்குக் குறி கேட்க வருபவர்கள் தலையின் மீது ஏறிக் குறி சொல்வாராம். அதுமட்டுமில்லாமல் இவருக்குச் சீடர்கள் இருக்கின்றார்களாம். அவரிடம் குறி கேட்டு வருபவர்களிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன். லாட்டரியில் உங்களுக்குப் பணம் விழ வைக்கிறேன் என்று கூறி ஆயிரக் கணக்கில் பணம் வாங்குவாராம். 

இது போதாதென்று அவர்களுக்கு வேலை கிடைத்து விட்டால் இவருக்கு கமிஷன் தர வேண்டும் என்று பேரம் பேசுவாராம். ஒரு முறை இந்த கார்மேகச் சித்தரிடம் குறி கேட்க வந்த நபர், அவரது காரையே இவருக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டாராம். அந்த அளவுக்கு இவர் அப்பகுதியில் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கிறார் இவர்.

முதன் முதலாகக் குடிசை வீட்டில் குறி சொல்ல ஆரம்பித்த இவர், மக்களிடம் காணிக்கை வாங்கி இப்போது ஒரு சொந்த வீடே கட்டி வருகிறார். இவரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இவர் போலி சாமியாராக இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.