×

‘அழகிப்பட்டம்’ வென்ற கோவை பெண் சோனாலி பிரதீப்…அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது !

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த பெண் சோனாலி பிரதீப் கலந்து கொண்டார். மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த பெண் சோனாலி பிரதீப் கலந்து கொண்டார். அதில் அவர், ‘பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்-2019’ என்ற பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் இந்த பட்டத்தை வென்றதால் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இவர் தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு
 

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த பெண் சோனாலி பிரதீப் கலந்து கொண்டார்.

மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கோவையைச் சேர்ந்த பெண் சோனாலி பிரதீப் கலந்து கொண்டார். அதில் அவர், ‘பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்-2019’ என்ற பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் இந்த பட்டத்தை வென்றதால் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இவர் தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு அளித்துள்ளார்.

இதனிடையே, சோனாலி பிரதீப் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி ஆபாசமாகச் சித்தரித்து வருவதாகவும் அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சோனாலி மீது அவதூறு பரப்பி வரும் நபர்களை வலைவீசித் தேடிவந்த போலீசார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரைக் கைது செய்துள்ளனர். ரகுபதி மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.