"அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது; தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்”- மாணிக்கம் தாகூர்
அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமையாதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட மாநகர செயலாளரும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய தளபதி, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ. ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன? என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்தமுறை சீட்டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் INDIA கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு ரூ.3,000, ரூ.4,000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டு போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்” என விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.