×

ஹெல்மெட் அணியாத கல்லூரி மாணவர்…பூட்ஸ் காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர்!

வாழப்பாடி காவல்நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சிவசக்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சரத். இவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வாழப்பாடிக்கு சென்றுள்ளார்.அப்போது வாழப்பாடி காவல்நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சிவசக்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணியாத சரத்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூற அவர் வாகனத்தை கொஞ்சம் தள்ளி போய் நிறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மாணவனை
 

வாழப்பாடி காவல்நிலையம் அருகே  உதவி ஆய்வாளர் சிவசக்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சரத். இவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வாழப்பாடிக்கு சென்றுள்ளார்.அப்போது வாழப்பாடி காவல்நிலையம் அருகே  உதவி ஆய்வாளர் சிவசக்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணியாத  சரத்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூற அவர் வாகனத்தை கொஞ்சம் தள்ளி போய்  நிறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மாணவனை பூட்ஸ் காலால்  எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவர் சரத், கூறுகையில், உதவி ஆய்வாளர் என்னை சாதி பெயரைவைத்துத் திட்டினார். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். எங்கள் புகாரை அவர்கள் வாங்க மறுத்தனர் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.