×

வெள்ளை சட்டை அணிந்து பொருள் வாங்கிய 4 பேர்..பணம் கொடுக்காமல் மோசடி.. மாட்டிக் கொடுத்த சிசிடிவி !

இவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ஒருவர் வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் தாளைக் கொடுக்கிறார். சென்னை அருகே மாங்காட்டில் பர்வீனா என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார் . இவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ஒருவர் வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் தாளைக் கொடுக்கிறார். பர்வீனா அந்த நபரிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சில்லறை கொடுத்துள்ளார். அப்போது, இரண்டாவது நபர் அவர் வாங்கிய பொருளுக்காக
 

இவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ஒருவர் வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் தாளைக் கொடுக்கிறார்.

சென்னை அருகே மாங்காட்டில் பர்வீனா என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார் . இவரது கடைக்கு வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ஒருவர் வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் தாளைக் கொடுக்கிறார். பர்வீனா அந்த நபரிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சில்லறை கொடுத்துள்ளார்.

அப்போது, இரண்டாவது நபர் அவர் வாங்கிய பொருளுக்காக 500 ரூபாய் தாளை நீட்டுகிறார். இரண்டாவது நபர் பணம் கொடுக்கையில் முதல் நபர், தனக்குக் கொடுத்த 100 ரூபாய் நோட்டு கிழிந்திருப்பதாக கூறி பர்வீனாவை திசை திருப்புகிறார். அப்போது இரண்டாவது நபர் பணம் கொடுக்காமலேயே அந்த பணத்தை பாக்கெட்டில் வைத்து கொண்டு, பர்வீனாவுடம் இருந்து மீதி பணத்தை பெறுகிறார். 

இதற்கிடையே மூன்றாவது மற்றும் நான்காவதாக வந்த நபர்களும் இதே போல கடை உரிமையாளரை ஏமாற்றுகின்றனர். பிளான் போட்டு வந்த அந்த 4 பேரும் பணம் கொடுக்காமல் பொருளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதனால் குழம்பிப் போன பர்வீனா காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்ததில், இவர்கள் மோசடி செய்த முழு வீடியோவும் பதிவாகியுள்ளது.