வீடியோ கேம் வடிவில் காண்ட்ராக்டர் நேசமணி! சாவடிக்கிறாங்களே என்னய….
அதற்கு துபாயில் பொறியாளராக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர், ‘இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டங், டங் என சப்தம் கேட்கும். இந்த சுத்தியல் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்’
சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆட்டிவைத்த காண்ட்ராக்டர் நேசமணியை வைத்து தற்போது டிக்டாக்கில் வீடியோ கேமாக வைரலாகிவருகிறது.
கடந்த வாரம் பாகிஸ்தானை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்’ என பதிவிட்டிருந்தார். அதற்கு துபாயில் பொறியாளராக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர், ‘இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டங், டங் என சப்தம் கேட்கும். இந்த சுத்தியல் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்’ என காமெடியாக சொல்ல, அதனை சீரியஸாக எடுத்துக்கொண்ட அந்த சிவில் என் ஜினியர் நேசமணி குணமடைய கடவுளை பிரார்த்துக்கிறேன் என #PrayforNesamani என பதிவிட்டார். காமெடி வசனத்திற்காக உலகமுழுவதுமுள்ள நெட்டிசன்கள் நேசமணிக்காக கடவுளிடம் வேண்டினர்.
இந்நிலையில், டிக் டாக் ஆப்பில் நேசமணி என்ற பெயரில் மொபைல் வீடியோ கேம் ஒன்று பிரபலமாகி வருகிறது. அதில் நேசமணி காண்ட்ராக்டர் மீது கிருஷ்ணமூர்த்தியின் சுத்தியல் விழாமல் காப்பாற்ற வேண்டும். எத்தனை சுத்தியல் அவர் மீது விழாமல் காப்பாற்றுகிறோம் என்று கடைசியில் நமக்கு காட்டுகிறது. இந்த வீடியோ கேம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.