×

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது! 3 பேர் பலி

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. வேன் தீப்பிடித்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. வேன் தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். திண்டிவனம் செஞ்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வட வானூர் என்ற இடத்தில் பட்டாசு ஏற்றிவந்த டாட்டா ஏசி திடீரென வெடித்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து
 

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. வேன் தீப்பிடித்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது. வேன் தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

திண்டிவனம் செஞ்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வட வானூர் என்ற இடத்தில் பட்டாசு ஏற்றிவந்த டாட்டா ஏசி திடீரென வெடித்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்டனர். விபத்துக்குள்ளான வாகனம் பாண்டிச்சேரி முருங்கப்பாக்கம்  ஏரியாவில் இருந்து வந்ததாகவும்,  ஃபயர் சர்வீஸ் என்ற பட்டாசு குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டதும் தெரியவந்தது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 16 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வாகனம் வெடித்த போது ஏற்பட்ட அதிர்வினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அந்த வழியாக சில மீட்டர்கள் தூரத்துக்கு அப்பால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் கண்ணாடிகளும் நொறுங்கின. அருகே இருந்த ஒரு டீ கடை தரை மட்டமானது.