×

வித்தியாசமான முறையில் டெல்டா மக்களுக்கு கைகொடுத்த சமுத்திரகனி; குவியும் பாராட்டுகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வித்தியாசமான முறையில் கைக்கொடுத்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இயக்குநர் சமுத்திரகனி. சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வித்தியாசமான முறையில் கைக்கொடுத்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இயக்குநர் சமுத்திரகனி. கஜா புயலால் பெரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நிவாரண பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், சமுக
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வித்தியாசமான முறையில் கைக்கொடுத்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இயக்குநர் சமுத்திரகனி.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வித்தியாசமான முறையில் கைக்கொடுத்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இயக்குநர் சமுத்திரகனி.

கஜா புயலால் பெரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நிவாரண பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் விமர்சித்தனர். இதனால், நிவாரண உதவிகளை நாங்களே மேற்கொள்கிறோம் என தமிழகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் குவிந்துள்ளனர்.

தன்னார்வலர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும், வணிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை டெல்டா மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில், மின்சாரம் இல்லாமல் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி இன்றி தவித்த மக்களுக்கு ஜெனரேட்டர் கொடுத்து உதவியுள்ளார் இயக்குநர் சமுத்திரகனி.

சமுத்திரகனியின் இந்த வித்தியாசமான உதவிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், சமுத்திரகனி தங்களுக்கு வழங்கிய ஜெனரேட்டர் பெரும் உதவியாக இருப்பதாகவும், உலகுடன் இணைய உதவியாக இருப்பதாகவும் டெல்டா மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.