×

விஜய்-யை பார்த்தால் பயம் -தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேட்டி!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலி : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. வழக்கறிஞர்கள்,
 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரது தந்தை  எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. வழக்கறிஞர்கள், விவசாயிகள் எனப் பல துறைகளைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது மக்களால் உயர்த்தப்பட்டவர், மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் அதில் என்ன தவறு. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் பயப்படுகிறார்கள்’ என்று கருத்து கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து நடிகர் விஜய் பேசியது  பல்வேறு  விமர்சனங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.