×

விஜயகாந்த் பாடலுக்கு போலீஸ் ஜீப்பில் டிக் டோக்: இருவர் கைது!

காவல்துறையினர் பயன்படுத்தும் ஜீப்பில் டிக் டோக் செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்: காவல்துறையினர் பயன்படுத்தும் ஜீப்பில் டிக் டோக் செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பயன்படுத்தி வரும் போலீஸ் ஜீப் பழுதடைந்து விட்டது. அதனால், பழுது நீக்குவதற்காக, நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் மெக்கானிக் ஷாப்பில் ஜீப் விடப்பட்டது. பட்டறையில் இருந்த மெக்கானிக் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சபரிநாதன் ஜீப்பில் இருந்து இறங்கி
 

காவல்துறையினர் பயன்படுத்தும் ஜீப்பில் டிக் டோக் செய்த  2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்: காவல்துறையினர் பயன்படுத்தும் ஜீப்பில் டிக் டோக் செய்த  2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பயன்படுத்தி வரும் போலீஸ் ஜீப் பழுதடைந்து விட்டது. அதனால், பழுது நீக்குவதற்காக, நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் மெக்கானிக் ஷாப்பில் ஜீப் விடப்பட்டது. பட்டறையில் இருந்த மெக்கானிக் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சபரிநாதன் ஜீப்பில் இருந்து இறங்கி வருவது போல், தவசிப் படப் பாடலை இணைத்து டிக் டோக் ஆப்பில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியதைப் பார்த்த போலீசார், ஜீப் ஒட்டுநர் சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ்குமார், சபரிநாதன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

முன்னதாக சிவகாசியில் காவல்நிலையப் படிகளில் ஏறி இறங்குவதுபோல், டிக் டோக்  செய்த 4 இளைஞர்கள் மற்றும் அதைப் பரப்பிய 9 பேர் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.