×

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தங்க தமிழ்செல்வன்… டி.டி.வியை கழற்றி விட்டதால் எடப்பாடி அதிரடி ஆஃபர்..!

அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக தங்க தமிழ்ச்செல்வன் நேற்று இரவே அமைச்சர் தங்கமணியோடு பேசியிருக்கிறார். விரைவில் அதிமுக அணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த தங்கமணி நேற்று இரவே முதல்வர் எடப்பாடியிடமும் பேசியிருக்கிறார். ‘இப்போதைக்கு ஓ.பன்னீருக்கும் செக் வைக்கணும், தினகரனுக்கும் செக் வைக்கணும்னா
 

அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு  ராஜ்யசபா சீட் கொடுக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதற்காக  தங்க தமிழ்ச்செல்வன் நேற்று இரவே அமைச்சர் தங்கமணியோடு பேசியிருக்கிறார். விரைவில் அதிமுக அணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு மகிழ்ந்த தங்கமணி நேற்று இரவே முதல்வர் எடப்பாடியிடமும் பேசியிருக்கிறார்.

‘இப்போதைக்கு ஓ.பன்னீருக்கும் செக் வைக்கணும், தினகரனுக்கும் செக் வைக்கணும்னா அதுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தான் சரியான ஆயுதம். ஏற்கனவே அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்த நிலையில இப்ப அவராவே வர்றேனு சொல்றாரு. உங்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறாரு’ என்று தங்கமணி சொல்ல, சமீபத்திய உடல் நல டென்ஷனில் இருந்த எடப்பாடியும் இதைக் கேட்டு மகிழ்ந்து, ‘உடனே தங்கத்தைப் பார்த்து பேசிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

தங்க தமிழ்செல்வன் சென்னையில் மேரிஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இன்று அமைச்சர் தங்கமணியை சந்திக்க எழும்பூர் அசோகா ஹோட்டலுக்கு பிற்பகலில் வந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அவர் வந்த சற்று நேரத்தில் அமைச்சர் தங்கமணி ஒரு தனியார் காரில் அசோகா ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். இன்று பிற்பகல் இருவரும் பேசி முடிவெடுத்துவிட்டனர். அதன்படி எந்த நேரமும் முதல்வர் எடப்பாடியை சந்திக்க ஆயத்தமாகிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். இந்த பேச்சுவார்த்தைகளின் இடையில்தான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அண்ணன் எடப்பாடி அரசு பிளாஸ்டிக்கை ஒழித்திருப்பது எனக்கு பிடித்த விஷயம்’ என்று மனம் திறந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.