யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கிறீர்கள்? ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வருக்கு கமல் ஹாசன் கேள்வி!
தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த தன்னிச்சை முடிவாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் ஊரடங்கு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும்போது என் முதல்வர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கின்றார். என்னுடைய குரல் மக்கள் சார்பான குரல். உடனே உங்கள் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கை நீடித்து உத்தரவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.