×

யாருக்கும் தெரியாமல் காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண்? : திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை: காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் இளம்பெண் மஞ்சுளா. பொள்ளாச்சியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே மில்லில் வேலை செய்து வந்த கார்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து தனது தாய் வசந்தா அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்து
 

காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: காதலன் வீட்டில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் இளம்பெண் மஞ்சுளா. பொள்ளாச்சியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே  மில்லில் வேலை செய்து வந்த கார்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து தனது தாய் வசந்தா அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்து மஞ்சுளா சென்று பார்த்தார்.

புதன் கிழமை தாயைப் பார்த்து விட்டு புறப்பட்ட மஞ்சுளா, மில்லுக்குச் செல்லவில்லை என்பது இரண்டு நாட்கள் கழித்து தான் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரிந்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் உப்பிலிபாளையத்தில் உள்ள காதலன் கார்த்தி வீட்டில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா குடும்பத்தினர்,  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே மஞ்சுளா கொல்லப்பட்டு இருப்பதாகவும்  குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘கடந்த புதன் கிழமை அன்று தாயைப் பார்த்து விட்டு தனது செல்போனை அணைத்து விட்டு நேராக காதலன் வீட்டிற்கு மஞ்சுளா சென்றுள்ளார். 3 நாட்கள் கார்த்தியின் வீட்டில் மஞ்சுளா இருந்துள்ளார். ஆனால் மஞ்சுளா என்ற பெண் தங்கள் வீட்டில் இருந்தது தங்களுக்கு தெரியாது’ என்று கார்த்தியின் பெற்றோர் கூறக் கேட்டு பல்லடம் போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.

இதையடுத்து கார்த்தியை கைது செய்துள்ள போலீசார், அவரது தாய் சிவகாமியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளுமாறு மஞ்சுளா வற்புறுத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் போது அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கார்த்தி கூறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.